file 20201007 22 lql17v 1 scaled
செய்திகள்இலங்கை

குணமடைந்த பின்னரும் சிறுவர்களுக்கு ஏற்படும் புதிய அறிகுறிகள்!

Share

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர்கள் அனைவரும் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், மீண்டும் உடல் உறுப்புக்களில் தொற்று ஏற்பட்டதால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களாவார்.

குறிப்பாக மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பல்வேறு பிரச்சினைகள், இதயத் துடிப்பு அதிகரித்தல், நிமோனியா, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இவர்களிடம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்றிலிருந்து குணமடைந்து 6 மாதங்கள் வரை இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...