Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

Share

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளாக

  • வீட்டிலிருந்து தொழில், மருத்துவமனை தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுகளில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களும் எதிர்வரும் ஒக்ரோபர் 31 வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

  • ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்து தடைவிதிப்பு

  • பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்போத 10 பேருக்கு மாத்திரமே குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி

  • எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்படாது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்கள் நடத்த பரிந்துரை

  • எனினும் இந்தத் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மரணச் சடங்கில் கலந்து கொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

  • எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின் மரண நிகழ்வு கலந்து கொள்ள 15 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • சமய ஸ்தலங்கள், கூட்டுவழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

  • பாடசாலைகள் 200 இற்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்க முடியும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய ஆரம்பிக்கலாம்.

  • அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்படமாட்டது.

  • பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

  • முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

  • பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...