Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

Share

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளாக

  • வீட்டிலிருந்து தொழில், மருத்துவமனை தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுகளில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களும் எதிர்வரும் ஒக்ரோபர் 31 வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

  • ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்து தடைவிதிப்பு

  • பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்போத 10 பேருக்கு மாத்திரமே குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி

  • எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்படாது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்கள் நடத்த பரிந்துரை

  • எனினும் இந்தத் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மரணச் சடங்கில் கலந்து கொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

  • எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின் மரண நிகழ்வு கலந்து கொள்ள 15 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • சமய ஸ்தலங்கள், கூட்டுவழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

  • பாடசாலைகள் 200 இற்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்க முடியும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய ஆரம்பிக்கலாம்.

  • அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்படமாட்டது.

  • பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

  • முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

  • பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...