Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

Share

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளாக

  • வீட்டிலிருந்து தொழில், மருத்துவமனை தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுகளில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களும் எதிர்வரும் ஒக்ரோபர் 31 வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

  • ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்து தடைவிதிப்பு

  • பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்போத 10 பேருக்கு மாத்திரமே குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி

  • எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்படாது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்கள் நடத்த பரிந்துரை

  • எனினும் இந்தத் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மரணச் சடங்கில் கலந்து கொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

  • எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின் மரண நிகழ்வு கலந்து கொள்ள 15 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • சமய ஸ்தலங்கள், கூட்டுவழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

  • பாடசாலைகள் 200 இற்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்க முடியும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய ஆரம்பிக்கலாம்.

  • அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்படமாட்டது.

  • பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

  • முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

  • பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...