Hemantha Herath
செய்திகள்இலங்கை

ஊரடங்கை நீக்க திட்டங்கள் வேண்டும்! – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை திறக்கும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு சென்றால் கொரோனாத் தொற்று முடிவடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் தற்போதே பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரிவினரால் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் நாட்டை திறக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...