Parliament SL 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

அனைத்து காட்சிகளையும் உள்ளடக்கி தேசிய அரசு!

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய அரசொன்றை அமைப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்துவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இது தொடர்பில் ஆளுந்தரப்பு தீவிரமாக பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளான ஈபிடிபி, பிள்ளையானிக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன தற்போது அரசுக்கு ஆதரவு வழங்கிவருகின்றன. முஸ்லிம் தேசியக் கூட்டணியும் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து தேசிய அரசை அமைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தேசிய அரசமைக்கும் திட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...