03 photo
செய்திகள்இலங்கை

இயற்கை எய்தினார் நல்லூர் ஆலய நிர்வாகி!

Share

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குமாரதாஸ மாப்பாண முதலியார் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு, இந்து சயமப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாப்பாண முதலியாரின் இழப்பு பாரிய இழப்பு எனவும், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தனதும், மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...