03 photo
செய்திகள்இலங்கை

இயற்கை எய்தினார் நல்லூர் ஆலய நிர்வாகி!

Share

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குமாரதாஸ மாப்பாண முதலியார் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு, இந்து சயமப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாப்பாண முதலியாரின் இழப்பு பாரிய இழப்பு எனவும், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தனதும், மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...

17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...