270039045 5611151305579086 2124219315590749323 n
செய்திகள்அரசியல்இலங்கை

மயிலிட்டி துறைமுகம் சீனாவிற்கா? இந்தியாவிற்கா?

Share

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய நிதி முதலீட்டில் இந்த மீன்பிடித் துறைமுகத்தை அவிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

இந்த துறைமுகத் திட்டம் மூலம் வடக்கு மாகாணத்தில் உள்ள 109 ஒரு கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 15ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், 35 ஆயிரம் வேலையற்ற இளைஞர், யுவதிகள் மற்றும் 15ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் என்ற எதிர்பார்ப்பில் திட்ட வரைபு தயார் செய்யப்பட்டது.

4 வருடங்களுக்குள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முதற்கட்ட வேலைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்றன.

எனினும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாது சிலர் கடிதப் பரிமாற்றங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்தனர்.

எனினும் இந்தத் திட்டத்தை செயற்படுத்துமாறு பருத்தித்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தன.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியாவும் சீனாவும் ஒப்பந்த அடிப்படையில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று செய்வதற்கான விருப்பங்களை வெளியிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...