mp
செய்திகள்உலகம்

சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

Share

பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார்.

இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே மருத்துவமனையிருப்பதால், அவர் தனது துவிச்சக்கரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...