WhatsApp Image 2021 09 10 at 21.10.01
செய்திகள்இலங்கை

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய் கொவிட்டால் சாவு!

Share

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இவருக்கு முச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளன. அவர் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இரண்டும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

 

யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...