நாட்டிலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்கு!

emigration

அண்மை நாட்களாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகள், அதிகரித்து வருகின்றன என தெரியவருகிறது.

இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை, போர்க் காலத்தில் மாத்திரமே இருந்தது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம், அதிகளவான இளைஞர்கள் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நீண்ட வரிசையில் ஒரு நாள் சேவையில் விரைவாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள தினமும் ஆயிரம் பேர் வரை வருகை தருகின்றனர் எனவும், திணைக்கள அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version