mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை: விவசாய அமைச்சர்

Share

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, ” விவசாயிகளால் பயிரிடப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு வனவிலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர்,

” இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப்பொருட்களில் 45 முதல் 50 வீதமானவை வன விலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன.

காட்டு யானைகளால்தான் பெரும் பாதிப்பு. எனவே, யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென தனி அமைச்சே உருவாக்கப்பட்டுள்ளது.

குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை. வீடொன்றில் மிளகாய் செடி ஒன்றைக்கூட விட்டு வைப்பதில்லை. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. வெளிநாடுகளில் கையாளப்படும் முறைமைகள் குறித்தும் கண்காணிக்கப்படுகின்றது.

போக்குவரத்தின்போது அழிவு ஏற்படுகின்றது. எனவே, ரயில்கள் மூலம் விவசாய உற்பத்திகளை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...