Dullas 666 1
செய்திகள்இலங்கை

காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்

Share

காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்

இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் புலர்பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கும் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சிகளை நாம் காண்கிறோம். எனவே இவர்கள் இலங்கையின் பிரஜைகள். இவர்கள் தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே சிறந்தது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக என்னால் கூற முடியாது. இதனைக் கண்டறியவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டு புலம்பெயர் இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இது குறித்து பேச்சு நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...