தெலுங்கானா மாநில அரச வைத்தியசாலை ஒன்றில் 24 விரல்களோடு பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜாகிட்யால் என்ற மாவட்டத்தில் உள்ள கோரட்லா வைத்தியசாலையில் அண்மையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் 24 விரல்கள் கொண்ட அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார்.
குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் இருந்துள்ளன.
இதனால், மொத்தமாக அந்த குழந்தையின் உடலில் 24 விரல்கள் இருந்துள்ளது. மேலும், அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசய குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
#world
Leave a comment