WhatsApp Image 2021 11 06 at 8.41.54 AM
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

Share

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2ம் திகதி நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவருக்கு ஹக்கீமும், மனோவும் எடுத்துக் கூறினர்.

மேலும், வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புகிறோம் என மனோவும், ஹக்கீமும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்,

“தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.” அந்த முயற்சியை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பமாட்டாது. நாங்கள் கலந்து பேசத்தான் வேண்டும். ஒற்றுமையை மேலும் பலப்படுத்தத்தான் வேண்டும்.

தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தை தளத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும்போது, நமது கட்சி எம்.பிக்களுடன் கலந்து பேசி உங்களுக்கு அறிவிக்கிறேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...