vavuniya scaled
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

13 இற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!

Share

ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராகவும், சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இந்தப் பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியானது, ஏ – 9 வீதியூடாகச் சென்று தாண்டிக்குளம் – ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தை அடைந்து பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் பேரணியில் கலந்துகொண்ட மக்கள், “ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி சமஷ்டித் தீர்வை நடைமுறைப்படுத்து”, “சர்வதேச விசாரணை வேண்டும்”, “இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்”, “இந்த மண் எங்களின் சொந்த மண்”, “இராணுவமே வெளியேறு”, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கு” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணி முடிவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை நீக்கக் கோரி கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கிட்டு பூங்கா பிரகடனத்தை வலியுறுத்தி ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் தமிழர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...