crash in Bulgaria.
செய்திகள்உலகம்

பாரிய விபத்து- 45பேர் சாவு

Share

பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர்.

துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தன.

திடீரென அந்த வீதியில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதிய பேருந்து ஒன்று தீப்பற்றியது.

அதில் 12 போ் சிறுவா்கள் உட்பட 45 போ் சம்பவ இடத்தில் கருகி சாவடைந்தனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இவ்விபத்தில் காயமடைந்த 7பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து பல்கேரியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்விபத்தால் நாடே சோகமயமாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பல்கேரியா அதிக விபத்துகள் நடைபெறும் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...