1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

மருதனார் மட வாள்வெட்டு- கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Share

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி மருதனார் மட சந்தியில் பழக்கடை நடாத்தும் 04 பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று (26) நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பநிலையில் எதிர்வரும் 06 திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற சிலர் வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...