unnamed 1
செய்திகள்இலங்கை

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவிநீக்கம் !

Share

அதிகார வரம்பு மீறிச் செயற்பட்ட காரணத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் இன்று (14 ) முதல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந் நடவடிக்கை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் மேற்கொள்ளப்பட்டுள்ளது , இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாவனையில் இருந்தது எனக் கூறப்படும் உழவு இயந்திரம் ஒன்று குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது, இந்த நிலையில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அந்த உழவு இயந்திரம் பிரதேச சபைக்குரியது என்று பிழையான உரிமை கோரும் கடிதத்தை வழங்கி உழவு இயந்திரத்தை நீதிமன்றத்தில் இருந்து விடுவித்துள்ளார். இதன்மூலம் அவர் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என ஆளுநருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பாக நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழு அறிக்கை, மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த தீர்மானங்களுக்கு அமைய இன்று முதல் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் பதவிகள் தற்போது வெற்றிடமாகி உள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...