Vinothan 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் கட்டாய புதிய நடைமுறை நாளை முதல் அமுல்!

Share

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் மன்னார் மாவட்டத்தில், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இம்முறையானது மன்னாரில் நடைமுறைக்கு வருகிறது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னாரில் தற்போதுள்ள காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாகக் காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

கொவிட் தொற்று அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது, சுகாதார நடை முறைகளைக் கடைப்பிடிக்காது செயற்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாகவே அமைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை(15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நடவடிக்கை குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபடுவார்கள்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும், இதுவரை மன்னார் மாவட்டத்தில் 2,685 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...