IMG 20211221 WA0022
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் இலத்திரனியல் பொருட்களை திருடிய நபர் கைது!

Share

வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 43” தொலைக்காட்சி, சீடி பிளேயர் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன களவாடப்பட்டிருந்தன.

குறித்த இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த போது சந்தேகநபரும், விற்பனை செய்ய உதவிய தரகரம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் அச்சுவேலியில் வசித்து வருவதோடு, கடந்த 10 ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஒருவரை தாக்கி மோதிரத்தை பறித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 3 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...