Arrested 611631070
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வழிப்பறியில் ஈடுபட்டவர் அதிரடியாக கைது!!

Share

கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் – இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இராச பாதை வீதியில் உள்ள தோட்ட வெளியில் ஆள்நடமாற்றம் அற்ற பகுதிகளில் நின்று காலை வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க வருவோர் மற்றும் மரக்கறி கொண்டு செல்வோரை இலக்கு வைத்து , பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து வந்துள்ளனர்.

வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...