மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் விதத்திலான தீர்மானங்களே எடுக்கப்படுகின்றன. தாங்கிக்கொள்ள முடியாதவகையில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, மக்களின் நிலைப்பாட்டை பரீசிலனை செய்வதற்காக மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். இதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு முன்வைக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
Leave a comment