யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர் பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
மக்கள் நெரிசலில் தனக்கு முன்னால் நின்று பயணித்த யுவதியை இளைஞன் பிளேட்டினால் வெட்டியுள்ளார். காயமடைந்த யுவதி சத்தம் போடவே மற்றைய பயணிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.
பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
#SrilankaNews