கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

Share

கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண் சுயநினைவு பெறாமல் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று (06.07.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சைக்கு சுயநினைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொஸ்கொட, பொரலுகெட்டிய தெற்கில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கமைய, அவருக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உடலின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக குழு ஒன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...