202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மணக்கோலத்தில் இளம் ஜோடி கைது!

Share

மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி, இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, இந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ, சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் வைத்து, 15 வயதான மணப்பெண்ணும் 19 வயதான மணமகனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் காதலுக்கு சிறுமியின் பாட்டனார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காதலனுடன் தப்பிச் சென்ற சிறுமி, மக்கொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, உறவினர்கள் ஒன்று கூடி திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...