galle face green 3 largejpg
இலங்கைசெய்திகள்

அனுமதி பெற்றே காலிமுகத்திடலை பயன்படுத்தலாம்!

Share

நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய காலிமுகத்திடல் பகுதியை இனி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

அத்துடன் முன்னர் போராட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட ‘ஆர்ப்பாட்ட இடமும்’ இனி இருக்காது. இனி போராட்டங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமானது. இந்தப் பகுதியில் புல் நடுகை செய்திருந்தோம். ஆனால் இப்போது அழிந்துள்ளது. இந்த நிலத்தை மீள புல் தரையாக மறுசீரமைக்கவுள்ளோம்.

இந்த காணியை எந்தவொரு தரப்பினருக்கும் குத்தகைக்கு வழங்கவோ அல்லது முதலீட்டுக்கு ஒதுக்கவோ திட்டம் இல்லை எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...