நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய காலிமுகத்திடல் பகுதியை இனி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் முன்னர் போராட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட ‘ஆர்ப்பாட்ட இடமும்’ இனி இருக்காது. இனி போராட்டங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமானது. இந்தப் பகுதியில் புல் நடுகை செய்திருந்தோம். ஆனால் இப்போது அழிந்துள்ளது. இந்த நிலத்தை மீள புல் தரையாக மறுசீரமைக்கவுள்ளோம்.
இந்த காணியை எந்தவொரு தரப்பினருக்கும் குத்தகைக்கு வழங்கவோ அல்லது முதலீட்டுக்கு ஒதுக்கவோ திட்டம் இல்லை எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

