tamilnaadif 7 scaled
இலங்கைசெய்திகள்

நடுவானில் பெண்ணுக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Share

பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.

இதன்போது விமான ஊழியர்களும் வைத்தியர் ஒருவரும் மாரடைப்பால் அவதியுற்ற பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர்.

இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

லிபியா நாட்டவரான பெண் தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேலதிக வைத்திய சிகிச்சை பெறும் பொருட்டு அந்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...