நாட்டில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக அமுற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக அரசு வருமானத்தை இழந்துள்ளது.
இந்த வருமான இழப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.குணசிரி விடுத்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுபானசாலைகளின் முன் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒன்றுகூடுபவர்களால் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஒன்றுகூடுபவர்களை சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.
இவற்றை கருத்தில்கொண்டு புதிய கொரோனா கொத்தணி உருவாகுவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முறை செயற்படுத்தப்படவுள்ளது.
எனவே ஊரடங்கு காலத்தில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்யும் பொறிமுறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment