Sivajilingam 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

கண்டிவாவிக்குள் பிள்ளையார் கோயிலைக் கட்டினால் விடுவீர்களோ? சிவாஜிலிங்கம்

Share

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு ஒரு தனி நாடு என்பதைப் போலவும், அவர் ஜனாதிபதியைப் போலவுமே, அவரது செயற்பாடு அமைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதன் பின்னணியின் அடிப்படையில் ஊடக சந்திப்பை நடாத்திய வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கண்டிவாவிக்குள் பிள்ளையார் கோயிலைக் கட்டினால் விடுவீர்களோ? ஆளுநர் என்ற வகையில் உறுஞ்சுகின்ற வகையில் செயற்பாடுகள் இருக்கின்றன.

அனைத்து விடயங்களையும் தகவலறியும் சட்டத்தின் மூலம் பகிரங்கப்படுத்தத் தயார். வருவீர்களா விவாதத்திற்கு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...