mano
செய்திகள்அரசியல்இலங்கை

‘அகலம் இன்னும் அதிகம்’ – மாவீரர் நினைவேந்தல் குறித்து மனோ!

Share

“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ள சென்ற சட்டத்தரணி சுபாஷ் தலைமையிலான குழுவினரை துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் இடைமறித்து அச்சுறுத்தினர். இந்த நிலையில் அங்கு சென்றவர்கள் அவர்கள் இடைமறித்த பகுதியிலேயே துப்பாக்கி முனைக்கு நேராக அவ்வித அச்சமுமின்றி மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

“ஆயுத போராட்டத்தை மீள ஆரம்பிக்க அல்ல என தெரிந்த நிலையிலும், இதே நினைவுகூரல் உரிமைகள் சிங்கள தெற்கிற்கு வழங்கப்பட்ட நிலையிலும், மரணித்தோரை நினைவுறுத்தும் உலகளாவிய உரிமை அடிப்படையில் நிகழும் நினைவுகூரல்களை சகித்துக்கொள்ள முடியாமை, இத்தனை காலம் கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 15
உலகம்செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளமை...

4 14
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

2 23
இலங்கைசெய்திகள்

35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சி

தமிழர் தாயகத்தில் 35க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில்...

3 15
உலகம்செய்திகள்

போர் இனிமேல் வேண்டாம்: புதிய பாப்பரசர் வல்லரசுகளுக்கு வேண்டுகோள்

போர் இனிமேல் போர் வேண்டாம் என புதிய பாப்பரசர் லியோ ஓஐஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாப்பரசராக...