black fungus
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

Share

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் கறுப்பு பூஞ்சை நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது இந்த நோய் அவர்களைத் தாக்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொற்று அல்லாத நோய் உள்ளவர்களுக்கும் இது உருவாக வாய்ப்பு உள்ளது .

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து பொருள்களை பெற்றுக்கொள்ளக்கூடாது.

எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...