சுசில் பிரேமஜயந்த ஏன் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அல்லது ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது பற்றி கேட்டறிந்து அறியத்தருகின்றேன்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த ஏன் நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில் எனக்கு வந்த குறுந்தகவல்மூலம்தான் விடயத்தை அறிந்தேன். எதற்காக அவர் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. இது பற்றி ஆராய்ந்து பார்க்கின்றேன்.
அரசில் இருந்தால் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். அரசை பாதுகாக்க வேண்டும். கூட்டு பொறுப்பை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் எச்சரித்திருந்தார். ” – என்றார் அமைச்சர் காமினி லொக்குகே.
#SrilankaNews
Leave a comment