24 662c0ff008d8f
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார்…!

Share

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என்று பசில் ராஜபக்‌ச (Basil Rajapaksa) தீர்மானித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சியின் ஆதரவை வழங்கும் தீர்மானம் குறித்து நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa), டீ.வி. சானக, திஸ்ஸ குட்டியாரச்சி, டப்.டீ.வீரசிங்க போன்றே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்‌சவை களமிறக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதன் காரணமாக தற்போதைய பரபரப்பான சூழலை தணிக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை கட்சியின் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் வரையிலும் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் தாமதிக்க பசில் ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார்.

எனினும் மொட்டுக் கட்சியின் மே தினப் பேரணியின் போது நாமலை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த ​வேண்டும் என்ற கோஷங்களை முன்வைக்க அவருக்கு ஆதரவான தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...