4 4
இலங்கைசெய்திகள்

எங்கே தேசபந்து : தேடும் பொலிஸார்

Share

நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை இருந்தபோதிலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon), பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே சுமார் 5 வீடுகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் அவர் இன்னும் தலைமறைவாகிய நிலையில் இருந்து வருகிறார்.

2023, டிசம்பர் 31, அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன பகுதியில் உள்ள ஒரு விருந்தகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப் பிரிவின் ஏழு அதிகாரிகளுடன் சேர்ந்து, அவரைக் கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இலங்கையின் 36வது பொலிஸ் அதிபராக தென்னகோன் நியமிக்கப்பட்டார்.

Share
தொடர்புடையது
tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...