wf1kXtqTxfNR9GlmlP08 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிரிக்கட் மட்டையால் தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!

Share

களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை தேசிய பாடசாலைக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் போது கிரிக்கட் மட்டையினால் தாக்கப்பட்ட திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கோன காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மக்கோன பகுதியில் இடம்பெற்ற இந்த கிரிக்கட் போட்டியில் திஸ்ஸ தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாடியதுடன் பதிலளித்தாடிய களுத்துறை தேசிய பாடசாலை அணி இறுதி ஓவரில் வெற்றியிலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.

அதன் பின்னர் மைதானத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த விக்கட்டுக்களை மாணவர்கள் அப்புறப்படுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவரை சிலர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இச் சம்பவத்தில் பாதிப்படைந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...