download 4 1
உலகம்செய்திகள்

நடுவானில் தீப்பற்றியொிந்த விமானம்!

Share

வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையத்தின் அருகே இரு இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விமானங்கள் விபத்துக்குள்ளானதை நேரில் கண்ட ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமையவே மீட்பு பணியாளர்களினால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுவதுடன், விமானத்தில் பயணித்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...