சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால், அரசாங்கம் கவிழ்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது.
இந்தநிலையில், அரசில் இருந்து கொண்டு அரசை விமர்சிக்காதும், அரசின் கொள்கைகளை ஏற்க முடியவில்லை என்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள்.
சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். கடந்த அரச தலைவருக்கான தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால், அரசாங்கம் கவிழ்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Leave a comment