செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதாரம் வீழ்வதற்கு இடமளிக்கமாட்டோம்! – ஜோன்ஸ்டன் பதிலடி

Johnston Fernando
Share

நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக – திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்லவால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல இரு நாட்கள் விவாதம் கோரியதுடன், நிதி அமைச்சர் தொடர்பிலும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனவரி முதலாம் திகதி நாடு வங்குரோத்தடையும், இது தொடர்பில் நேரலையில் வந்து தகவல் வெளியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார வல்லுனர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் சுட்டிக்காட்டினர். தூரநோக்கு சிந்தனையின்றி, தற்காலிக மகிழ்ச்சிக்காகவே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நாட்டில் பொருளாதாரம் விழுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் சிறப்பாக செயற்படுகின்றார். நிதி அமைச்சர் திறமையாக வழிநடத்துகின்றார்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...