new 1
இலங்கைசெய்திகள்

ஒரே நாடு, ஒரே சட்டம் – ஜனாதிபதி வாக்குறுதி

Share

இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார். நிகழ்வில் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸூம் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி இராணுவ தினத்தை முன்னிட்டு உரையாற்றுகையில்,

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியமைந்தமையை வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தப் போவதில்லை.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த 2 வருடங்களாக போராடி வருகின்றோம்.

நாட்டை முடக்கியமை, பல்வேறு தடைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்காக நியாயம் கூற முடியாது.

மக்களுக்காக நாம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் தொற்றைக் கட்டுப்படுத்தி புதிய இயல்பு நிலைமையில் நாட்டை திறந்து புது உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றவுள்ளோம்.

அத்துடன் புதிய அரசமைப்பை அடுத்த வருடத்துக்குள் கொண்டு வரவும் புதிய தேர்தல் முறைமையொன்றை அடுத்த வருடத்துக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வாக்குறுதியை இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

newrr

new 3

ne3

nr

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 30
இலங்கைசெய்திகள்

27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...

15 27
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அடுத்த தலைமை குறித்து ரவூப் ஹக்கீம் வெளிப்படை

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பது பேராளர் மாநாட்டிலே ஆகும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த...

14 29
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று...

9 29
இலங்கைசெய்திகள்

யாழில் அத்துமீறி சுவீகரிக்கப்பட்ட பொதுக்காணி : சுமந்திரன் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த...