12 15
இலங்கைசெய்திகள்

நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றிருக்க வேண்டியதில்லை – நலிந்த ஜயதிஸ்ஸ

Share

நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றிருக்க வேண்டியதில்லை – நலிந்த ஜயதிஸ்ஸ

நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, நாடு கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும் எந்தவொரு வருமான வழிகளும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட கடன் எல்லைகளின் அடிப்படையிலேயே புதிய அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்களின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...