amanda milling oskfbz
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்!

Share

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் (Amanda Milling) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதையஅரசியல் பொருளாதார சவால்களிற்கு அனைத்து தரப்பினரையும் ஜனநாயக ரீதியில் அமைதியான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தீர்வை காணவேண்டும். அத்துடன் அத்துடன் அனைத்து தரப்பினரும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். வன்முறைகளை பின்பற்றவேண்டாம்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மூலம் பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றது சர்வதேச நாணயநிதியத்தில் பிரிட்டன் ஐந்தாவது பெரிய பங்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஐநாவிற்கும் உலக உணவு ஸ்தாபனத்திற்கும் அது பெரும் பங்களிப்பை வழங்குகின்றது. – என்றார்.

மேலும், சர்வதேச அரங்கில் பிரிட்டனிற்கு குறிப்பிடத்தக்க குரல் உள்ளதாக தெரிவித்த அமன்டா மில்லிங் (Amanda Milling), இலங்கையின் கடன்நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து சக பாரிஸ் கழக உறுப்பினர்கள் உலக வங்கி உட்பட பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...