1 54
இலங்கைசெய்திகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி தொடர்பில் நீதிமன்று எடுத்த தீர்மானம்

Share

கொழும்பில்(colombo) 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda) தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதிபதி அமல் ரணராஜா(Judge Amal Ranaraja), இன்று (28) வழக்கில் இருந்து விலகினார்.

இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2008 இல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா, பி. குமரன் ரத்தினம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்தே மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி அமல் ரணராஜா, தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அமல் ரணராஜா முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவர் விலகுவதாகவும் நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி மாயாதுன்னே கொரயா தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி புதிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை பிரதிவாதியாகப் பெயரிட முடிவு செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்.

எனவே, சட்டமா அதிபரின் முடிவை செல்லாததாக்குவதற்கான ஒரு சான்றளிப்பு ஆணையை பிறப்பிக்குமாறு அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...