1 54
இலங்கைசெய்திகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி தொடர்பில் நீதிமன்று எடுத்த தீர்மானம்

Share

கொழும்பில்(colombo) 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda) தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதிபதி அமல் ரணராஜா(Judge Amal Ranaraja), இன்று (28) வழக்கில் இருந்து விலகினார்.

இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2008 இல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா, பி. குமரன் ரத்தினம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்தே மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி அமல் ரணராஜா, தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அமல் ரணராஜா முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவர் விலகுவதாகவும் நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி மாயாதுன்னே கொரயா தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி புதிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை பிரதிவாதியாகப் பெயரிட முடிவு செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்.

எனவே, சட்டமா அதிபரின் முடிவை செல்லாததாக்குவதற்கான ஒரு சான்றளிப்பு ஆணையை பிறப்பிக்குமாறு அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...