இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

rtjy 204

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை சுங்க பிரிவின் தகவல்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கத்தின் Letter head மற்றும் தொலைபேசி இலக்கங்களை மாத்திரம் பயன்படுத்தாமல் சுங்க அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுங்க ஊடக பேச்சாளர் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாளாந்தம் அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version