12 3
இலங்கைசெய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர்

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் (High Commissioner for Human Rights) வோல்கர் டுர்க் (Volker Türk), இலங்கையை வந்தடைந்தார்.

நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை விஜயம் செய்துள்ளார்.

இந்த பயணம், கடந்த 9 ஆண்டுகளில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ விஜயமாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), அவரை இலங்கையின் பிரதிச வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...