12 3
இலங்கைசெய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர்

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் (High Commissioner for Human Rights) வோல்கர் டுர்க் (Volker Türk), இலங்கையை வந்தடைந்தார்.

நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை விஜயம் செய்துள்ளார்.

இந்த பயணம், கடந்த 9 ஆண்டுகளில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ விஜயமாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), அவரை இலங்கையின் பிரதிச வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...