ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே 9 வன்முறையாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்! – பிரதமர் உறுதி

Share

மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” மே – 09 சம்பவத்தின் பின்னர் அரசியலுக்கு வருவதற்கு புத்திஜீவிகள் அஞ்சுகின்றனர். இதற்கான பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆயுத பலம் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும். சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.

வன்முறைச் சம்பவங்களுடன் அரசியல் கட்சிகளின்கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டுள்ளனர். மொட்டு கட்சியினரும் தொடர்புபட்டுள்ளனர். தனிப்பட்ட தேவை மற்றும் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.

விசாரணைகளின் பின்னர் கட்சிகளில் இருந்து அவர்களை நீக்கலாம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றேன். ” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...