ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே 9 வன்முறையாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்! – பிரதமர் உறுதி

Share

மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” மே – 09 சம்பவத்தின் பின்னர் அரசியலுக்கு வருவதற்கு புத்திஜீவிகள் அஞ்சுகின்றனர். இதற்கான பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆயுத பலம் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும். சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.

வன்முறைச் சம்பவங்களுடன் அரசியல் கட்சிகளின்கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டுள்ளனர். மொட்டு கட்சியினரும் தொடர்புபட்டுள்ளனர். தனிப்பட்ட தேவை மற்றும் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.

விசாரணைகளின் பின்னர் கட்சிகளில் இருந்து அவர்களை நீக்கலாம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றேன். ” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...