777777
இலங்கைசெய்திகள்

யாழில் ஊரடங்கு விதி மீறல் – அன்டிஜென் சோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி!

Share

தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து  கொக்குவில்– கே.கே.எஸ் வீதியில் ஆரம்பித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அதிவிரைவு அன்டிஜென் சோதனை முன்னெடுக்கும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 5 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...