777777
இலங்கைசெய்திகள்

யாழில் ஊரடங்கு விதி மீறல் – அன்டிஜென் சோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி!

Share

தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து  கொக்குவில்– கே.கே.எஸ் வீதியில் ஆரம்பித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அதிவிரைவு அன்டிஜென் சோதனை முன்னெடுக்கும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 5 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...