11 12
இலங்கை

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

Share

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் அல்ஜீரியாவின் சார்பில் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அல்ஜீரியா வீசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் அலுவலகங்களை நிறுவியுள்ளது.

உலகின் பல அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் சுமார் 69 அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் சேவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து விதமான விசாக்களையும் வழங்கும் நோக்கில் புதுடெல்லி, மும்பை, சென்னை கொல்கொட்டா, ஹைதராபாத், காட்மண்டு மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை ஊடாக அல்ஜீரியாவிற்கு விசா கோரி விண்ணப்பம் செய்யும் இந்திய பிரஜைகளுக்கு இலகுவான சேவையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் காரியாலயங்கள் நிறுவப்பட்ட காரணத்தினால் பயணிகள் இலகுவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஆறு நாட்களில் விசாவை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திற்கு விசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு அனுமதித்த காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இடை நிறுத்துமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...